உலகின் முதல் நிலை மன்றமாக வளர்ந்து வரும் போ ஆவ் ஆசிய மன்றம்
2021-04-20 15:07:51

போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2021ஆம் ஆண்டுக் கூட்டம் 20ஆம் நாள் முற்பகல் துவங்கியது. இக்கூட்டத்தில் சீன ட்சிங்குவா பல்கலைக்கழகத்தின் தேசிய நாணய ஆய்வகத்தின் தலைவரும், சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் துணை தலைமை இயக்குநருமான ட்சு மின் பேசுகையில், போ ஆவ் ஆசிய மன்றம் நிறுவப்பட்ட கடந்த 20 ஆண்டுகளில், உலகில் முதல் நிலை மன்றமாக வளர்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.

தற்போது போ ஆவ் ஆசிய மன்றம், தொழில்துறை, வணிகம் மற்றும் நாணயத் துறைகளில் கவனம் செலுத்துவது மட்டுமல்ல, அறிவியல் தொழில் நுட்பம், மருத்துவச் சிகிச்சை, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளது. இம்மன்றத்தின் ஆண்டுக்கூட்டங்களில் மேலதிக அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது என்று அவர் கருத்து தெரிவித்தார்.