© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனச் சுற்றுச் சூழல் துறை அமைச்சகம் செப்டம்பர் 23ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. அதில், உயிரினங்களின் பல்வகை தன்மைக்கான ஐ.நாவின் பொது உடன்படிக்கையை உருவாக்கும் தரப்புகளின் 15ஆவது மாநாட்டுக்கான ஏற்பாட்டு நிலைமை குறித்து தெரிவிக்கப்பட்டது. இம்மாநாடு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதலாவது கூட்டம் 2021ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 11ஆம் நாள் முதல் 15ஆம் நாள் வரையிலான காலத்திலும், இரண்டாவது கூட்டம் 2022ஆம் ஆண்டின் முற்பாதியிலும், சீனாவின் குன்மிங் நகரில் நடைபெறும். இக்கூட்டத்தின் முதலாவது கட்டத்தின் போது, புதிய தலைவர் தேர்தல் நடைபெறும். அதே வேளையில், குன்மிங் அறிக்கையும் இதில் வெளியிடப்படும். இது தொடர்பாக பல்வேறு தரப்புகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, பூமியில் உயிருக்கான பொதுச் சமூகத்தை உருவாக்கும் அறைகூவலுக்குப் பதிலளிக்க வேண்டும்.