• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானின் சங்கின் பிரதேசத்திலிருந்து வெளியேறிய அரசுப்படை
  2017-03-24 15:46:39  cri எழுத்தின் அளவு:  A A A   

தலிபான் அமைப்பின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்து, தெற்கு ஆப்கானிஸ்தானிலுள்ள ஹெல்மந்து மாநிலத்தின் சங்கின் எனும் முக்கிய பிரதேசத்திலிருந்து அரசுப்படை மார்ச் 23-ஆம் நாள் வெளியேறியுள்ளதாக அம்மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பஷீர் அகமது ஷாகீர் தெரிவித்துள்ளார்.

அரசுப்படை இப்பிரதேசத்திலிருந்து வெளியேறிய பின், தலிபான் தீவிரவாதிகள் சங்கின் மையப் பகுதியில் நுழைந்துள்ளனர் என்றும் ஷாகீர் கூறினார்.

சங்கின் பிரதேசத்தின் நாடாளுமன்றத் தலைவர் ஹஜ்ஜி மிராஜன் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், தலிபான் அமைப்பு பயனுள்ள பொருட்களைப் பெறுவதை தவிர்க்கும் வகையில், அரசுப்படை இப்பிரதேசத்தின் மையப் பகுதி மீது குண்டு வீசியதாகவும் அவர் தெரிவித்தார்.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040