ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை தொடர்பான 6 நாடுகள் ஈரானுடன் இணைந்து 25ஆம் நாள் வியன்னாவில் இப்பிரச்சினை பற்றிய பன்முக உடன்படிக்கைக்கான கூட்டுக் கமிட்டியின் 7ஆவது கூட்டத்தை நடத்தின. பன்முக உடன்படிக்கையின் அமலாக்கத்துக்கான சீன ஒருங்கிணைப்பாளர் டொங் ச்சிஹுவா இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில் பன்முக உடன்படிக்கையைச் சீனா எப்போதுமே உறுதியாக ஆதரிக்கிறது என்றும், சீன-ஈரான் தொழில் நிறுவனங்கள் கடந்த 23ஆம் நாள் அராக் கன நீர் அணு உலை சீரமைப்பு திட்டப்பணிக்கான முதலாவது வணிக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது, இவ்வுடன்படிக்கையைப் பேணிக்காத்து செயல்படுத்தும் சீனாவின் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.(வான்மதி)