துருக்கி போர் விமானம், ஈராக் மற்றும் சிரியாவிலுள்ள குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் ஆயுத்தாரிகளை இலக்காகக் கொண்டு வான் தாக்குதல் நடத்தியது. இதில் 70 ஆயுத்தாரிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று துருக்கி முப்படை தளபதிகள் தலைமையகம் 25ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
ஈராக் வடப்பகுதியிலுள்ள சின்ஜார் பிரதேசத்தின் மீது துருக்கி வான் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈராக் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது என்று ஈராக் தலைமையமைச்சர் அபாட் கூறினார். ஈராக் ஊடகம் வெளியிட்ட தகவலின் படி, இத்தாக்குதலில் ஈராக்குர்திஸ்தான் ஆயுததாரிகள் 5 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்தனர்.