• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவில் கூட்டு ஆய்வுக்கான பணிக்குழுக் கூட்டம்
  2017-04-27 09:21:03  cri எழுத்தின் அளவு:  A A A   
வங்கதேசம்-சீனா-இந்தியா-மியன்மார் பொருளாதார மண்டலம் தொடர்பான கூட்டு ஆய்வுக்கான பணிக்குழுவின் 3ஆவது கூட்டம் 25, 26 ஆகிய நாட்களில் இந்தியாவின் கோல்கட்டாவில் நடைபெற்றது. இந்த 4 நாடுகளின் அரசு வாரியங்கள், ஆய்வு நிறுவனங்கள், நாணய நிறுவனங்கள், தொழில் சங்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று, 4 நாடுகள் இணைந்து வரையும் ஆய்வு அறிக்கை பற்றி விவாதம் நடத்தினர்.

தொடர்பு, எரியாற்றல், முதலீடு, நிதி திரட்டல், சரக்கு மற்றும் சேவை வர்த்தகம், தொடரவல்ல வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய துறைகளிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகள் குறித்து பல ஒத்த கருத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கூட்டு ஆய்வு அறிக்கையின் வரைவுப் பணி நிறைவேற்றப்பட்ட பின், 4 நாட்டு அரசுகளுக்கிடையேயான வடிவமைப்புப் பணிக்கான கலந்தாய்வு தொடங்கப்படும் என்று இந்த 4 தரப்புகள் உடன்பட்டுள்ளன.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040