• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடும் காற்று மாசுப்பாட்டிற்கான காரணத்தைச் சமாளிக்கும் சீன அரசவையின் ஏற்பாடு
  2017-04-27 11:11:24  cri எழுத்தின் அளவு:  A A A   
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், சீன தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் 26ஆம் நாள் தலைமை தாங்கிய சீன அரசவையின் கூட்டத்தில், கடும் காற்று மாசுப்பாட்டிற்கான காரணங்கள் மற்றும் கட்டுப்பாட்டின் இன்னல்களைச் சமாளிக்கும் பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, நடுவண் அரசு மற்றும் அரசவையின் ஏற்பாட்டின்படி, பல்வேறு பிரதேசங்கள் மற்றும் வாரியங்கள், காற்று மாசுபாட்டிற்கான கட்டுப்பாட்டு மற்றும் தடுப்புப் பணிகளை விரிவாக்கியுள்ளன. முழு நாட்டின் காற்றுத் தரம் மொத்தமாக மேம்படுத்தப்பட்டுள்ளது என்று இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையில், அறிவியல், வேளாண்துறை, சுகாதாரம முதலிய பல வாரியங்கள் மற்றும் பிரிவுகள் இசைவாகச் செயல்பட்டு, இன்னல்களைச் சமாளிக்க உள்ளன. இதன் மூலம், பெய்ஜிங்-தியான்ஜின்-ஹேபெய் பிரதேசம் மற்றும் சுற்றுப்புறப்பிரதேசத்தில் காற்றுத் தரம் தொடர்ச்சியாக மேம்படுத்தப்படவுள்ளது என்று இக்கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040