• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினையை சரியான திசைக்கு கொண்டு வர வேண்டும்-சீனா
  2017-06-23 18:31:34  cri எழுத்தின் அளவு:  A A A   
கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சனை முக்கியமான கட்டத்தில் உள்ளது. சர்வதேச சமூகம் அனைத்து வாய்ப்புகளையும் இறுகப்பற்றி, அமைதி பேச்சுவார்த்தையைத் தூண்டும் அளவை அதிகரித்து, இப்பிரச்சனையை கலந்தாய்வு மூலம் தீர்க்கும் சரியான பாதைக்குக் கொண்டு வர வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கேங் ஷுவாங் 23ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்தியாவிலுள்ள வட கொரிய தூதர், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஆகியோரின் கூற்றுக்கள் குறித்து கேங் ஷுவாங் கூறுகையில், நெருக்கடி மற்றும் பகைமையைத் தணிவு செய்து, தொடர்பு மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கவும், பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்கி, இப்பிரச்சனையை வேரோடு தீர்க்கவும் துணைபுரியும் அனைத்து கருத்து மற்றும் முன்மொழிவையும் சீனா வரவேற்கிறது என்று குறிப்பிட்டார்.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040