பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர்களிடையேயான மூன்றாவது கூட்டம் ஜுன் 23ஆம் நாள் சீனாவின் தியன்ஜின் மாநகரில் நடைபெற்றது. பிரிக்ஸ் நாடுகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தைச் சீனா நடத்துவது இதுவே முதல்முறையாகும். சீனா, இந்தியா, ரஷியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும், ஐ.நா. சுற்றுச்சூழல் ஆணையத்தின் இயக்குநனர் எரிக் சோல்ஹெய்மும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். உலகளாவிய சுற்றுச்சூழல் பிரிச்சினைகள், பிரிக்ஸ் நாடுகளிடையேயான சுற்றுசூழல் ஒத்துழைப்புத் திசை உள்ளிட்ட அம்சங்கள் பற்றி அவர்கள் விவாதித்துள்ளனர்.