போர்த்துக்கல் நாட்டில் பயணம் மேற்கொண்ட இந்திய தலைமை அமைச்சர் நேரந்திர மோடியும், அந்நாட்டுத் தலைமை அமைச்சர் அண்டோனியோ மரியா கோஸ்டாவும் 24ஆம் நாள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாட்டுறவை மேலும் ஆழப்படுத்தி குறிப்பாக, பொருளாதார வர்த்தகம், அறிவியல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
போர்த்துக்கலில் நரேந்திர மோடி அன்று ஒரு நாள் பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தில், பொருளாதாரம், வர்த்தகம், அறிவியல் தொழில்நுட்பம், கலாச்சாரம், விளையாட்டு ஆகிய துறைகள் சார்ந்த 11 ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தானது என்று தெரிய வந்துள்ளது.