• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 20ஆவது ஆண்டின் போது ஷிச்சின்பீங்கின் கருத்து
  2017-06-27 09:06:13  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசம் நிறுவப்பட்ட 20ஆம் ஆண்டு நிறைவின் காலத்தில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் 26ஆம் நாள், சீன தேசிய அருங்காட்சியகத்துக்குச் சென்று, ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 20ஆவது ஆண்டின் சாதனைக் கண்காட்சியைப் பார்வையிட்டார்.

ஹாங்காங் தாய்நாட்டுக்கு திரும்பிய கடந்த 20 ஆண்டுகளாக, நடுவண் அரசு மற்றும் தாய்நாட்டின் உள்பிரதேசத்தின் பெரும் ஆதரவுடன், இப்பிரதேசத்தின் பல்வேறு இலட்சியங்களின் பன்முக வளர்ச்சியை நனவாக்கியுள்ளது. அதோடு, உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாதனைகளையும் அது பெற்றுள்ளது. "ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்" என்ற கொள்கையின் மாபெரும் பங்கை இது காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார்.

"ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்" என்ற கொள்கையை நாம் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் அடிப்படைச் சட்டத்தின்படி செயல்பட்டு, இப்பிரதேசத்தின் பல்வேறு துறைகளின் வளர்ச்சியை மேலும் செவ்வனே முன்னேற்ற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040