ஹாங்காங் தாய்நாட்டுக்கு திரும்பிய கடந்த 20 ஆண்டுகளாக, நடுவண் அரசு மற்றும் தாய்நாட்டின் உள்பிரதேசத்தின் பெரும் ஆதரவுடன், இப்பிரதேசத்தின் பல்வேறு இலட்சியங்களின் பன்முக வளர்ச்சியை நனவாக்கியுள்ளது. அதோடு, உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாதனைகளையும் அது பெற்றுள்ளது. "ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்" என்ற கொள்கையின் மாபெரும் பங்கை இது காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார்.
"ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்" என்ற கொள்கையை நாம் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் அடிப்படைச் சட்டத்தின்படி செயல்பட்டு, இப்பிரதேசத்தின் பல்வேறு துறைகளின் வளர்ச்சியை மேலும் செவ்வனே முன்னேற்ற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.(ஜெயா)