• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய எல்லை பாதுகாப்புப் படையின் செயல் குறித்து சீனாவின் கருத்து
  2017-06-27 09:39:05  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்திய எல்லை பாதுகாப்புப் படை, சீன-இந்திய எல்லையின் சிக்கிம் பகுதியில் எல்லையைக் கடந்த சம்பவம் பற்றி, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கேங்ஷுவாங் 26ஆம் நாள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், எல்லையைக் கடந்த பாதுகாப்புப் படையினர்களை இந்திய தரப்பு உடனடியாக வெளியேற்ற வேண்டும். அத்துடன், இந்த விடயத்தை புலனாய்வு செய்து, இரு நாட்டு எல்லையின் சிக்கிம் பகுதியின் அமைதியைப் பேணிக்காக்க வேண்டும் என்று கூறினார்.

சீன-இந்திய எல்லையின் சிக்கிம் பகுதி, 1890ஆம் ஆண்டின் சீன-பிரிட்டன் கூட்டத்தின் திபெத்-இந்திய உடன்படிக்கையில் வரையப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின், எழுத்து மூல வடிவில் இதனை நிர்ணயித்துள்ளது. இந்த பகுதியின் எல்லை சர்ச்சையில்லை என்று இந்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்திய தரப்பு, எல்லை உடன்படிக்கைக்கும், சீனாவின் உரிமைப் பிரதேசத்தின் இறையாண்மைக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று சீனா கோரிக்கை விடுத்துள்ளதாக கேங்ஷுவாங் கூறினார்.

அவர் கூறுகையில், இதனிடையில், இந்தச் சம்பவத்தால், பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, எல்லைப் பகுதியிலுள்ள நட்டுலா நுழைவாயிலின் மூலம் இந்திய அரசின் யாத்ரீகர்கள் குழு சீனாவில் மேற்கொள்ளும் புனிதப் பயணத்துக்கான ஏற்பாட்டை சீனா தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டியதானது. தூதாண்மை வழியில் இந்திய தரப்பிடம் இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040