சீனாவின் பாலியெஸ்ட்டர் நூல் மீது இந்தியாவின் பொருள் குவிப்பு விற்பனை எதிரான விசாரணை
26ஆம் நாள் இந்திய செய்தி ஊடகங்களின் செய்தியின்படி, இந்தியாவின் பொருள் குவிப்பு விற்பனை எதிர்ப்பு மற்றும் கூட்டு வரிவருமான தலைமை அலுவலகம் கூறுகையில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்த பாலியெஸ்ட்டர் நூல், குவிப்பு விற்பனை நிலையில் உள்ளது. உள்ளூர் தொழில் நிறுவனங்களின் விண்ணப்பத்திற்கு இணங்க, சீனாவின் இந்த பாலியெஸ்ட்டர் நூல் மீது இந்தியா குவிப்பு விற்பனைக்கு எதிராக விசாரனை மேற்கொள்ளவுள்ளது என்று தெரிவித்தது.
கடந்த சில ஆண்டுகளாக, சீனாவுடனான இந்தியாவின் சாதகமற்ற வர்த்தக நிலை இடைவிடாமல் அதிகரித்துள்ளது. இந்தியாவின் புள்ளிவிபரங்களின்படி, 2015 முதல் 2016ஆம் நிதியாண்டு வரை, சீன-இந்திய இரு தரப்பு வர்த்தகத் தொகை 7070 கோடி அமெரிக்க டாலராகும்.(ஜெயா)