இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் தொடர்வண்டி ஒன்று 19ஆம் நாள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதுவரை, இவ்விபத்தால் 23பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேலானோர் காயமடைந்தனர் என்று இந்திய செய்தி ஊடங்கள் 20ஆம் நாள் தகவல் வெளியிட்டன.
19ஆம் நாள் மாலை 6மணியளவில், உத்தர பிரதேச மாநிலத்தின் முசாஃபர்நகர் அருகில் இவ்விபத்து நிகழ்ந்தது. பேரழிவு மீட்புப் படை வீரர்களும் மருத்துவ சிகிச்சைக் குழுவினர்களும் விரைந்து வந்து மீட்புதவிப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தோர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.