ரஷியா: சிரியா அரசுப் படை அலிபோவை மீட்டுள்ளது
2017-08-22 18:03:14 cri எழுத்தின் அளவு: A A A
சிரியா அரசுப் படை, அந்நாட்டின் வட பகுதியிலுள்ள அலிபோவை முற்றிலும் மீட்டுள்ளது என்று ரஷிய முப்படை தளபதிகள் தலைமையகத்தின் செயல்பாட்டு தலைவர் செர்கை ருட்ஸ்கோ அண்மையில் தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக, ரஷிய படையின் ஆதரவுடன், சிரியா அரசுப் படை, அந்நாட்டிலுள்ள ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. 50க்கும் மேலான குடியேற்ற வசிப்பிடங்கள் திரும்பிப் பெறப்பட்டுள்ளன. அலிபோ மாநிலம் முழுவதும் சிரியா அரசுப் படையால் மீட்கப்பட்டுள்ளது. சிரிசா நிலைமை முற்றிலும் மாறியுள்ளதாக ருட்ஸ்கோ கூறியதாக ரோஸ்யா செகோடன்யா செய்தி ஊடகம் 21ஆம் நாள் வெளியிட்டுள்ளது.(ஜெயா)
உங்கள் கருத்தை பதிவு செய்ய