ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை பற்றிய பன்முக உடன்படிக்கையை தொடர்புடைய பல்வேறு தரப்புகள் முழுமூச்சுடன் ஆதரிக்க வேண்டும் என்று ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் 22ஆம் நாள் தெரிவித்தார்.
அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஐ.நா தலைமைச் செயலாளரின் செய்தித்தொடர்பாளர் துஜரிக் பேசுகையில், 2015ஆம் ஆண்டு ஈரானும், தொடர்புடைய 6 நாடுகளும் உருவாக்கிய பன்முக உடன்படிக்கை, பன்னாடுகள் அமைதி மற்றும் நிதானத்தை நாடும் போக்கில் மிக முக்கிய தூதாண்மை சாதனைகளில் ஒன்றாகும் எனவும், தொடர்புடைய பல்வேறு தரப்புகள் இவ்வுடன்படிக்கையை முழுமூச்சுடன் ஆதரிக்க வேண்டும் எனவும் குட்ரேஸ் கருதுவதாக தெரிவித்தார்.
அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் ஆகஸ்ட் 2ஆம் நாள் ஈரான் மீது புதிய தடை நடவடிக்கை மேற்கொள்ளும் கருத்துருவில் கையொப்பமிட்டார். ஈரான் மீது தடையை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டால், அணு ஆற்றல் பிரச்சினை பற்றிய பன்முக உடன்படிக்கையிலிருந்து ஈரான் விலகக்கூடும் என்று ஈராக் அரசுத் தலைவர் ருஹானி 15ஆம் நாள் மறை முகமாக கூறினார். (மீனா)