© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
நண்பர்களே!படம்பிடித்து மகிழ் எனும் புகைப்படப் போட்டியில் கலந்து கொள்ள வாங்க!!
கீழே இப்போட்டிக்கான விதிமுறைகளைப் பாருங்கள்.
சீன-இந்தியத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இந்தியாவுக்கான சீனத் தூதரகத்தின் ஒத்துழைப்புடன், படம்பிடித்து மகிழ் எனும் புகைப்படப் போட்டியைச் சீன ஊடகக் குழும தமிழ் பிரிவு நடத்துகிறது. நடப்புத் தலைப்பு:“சீனாவின் மீதான மனப்பதிவு”.
நேரம்:
2020ஆம் ஆண்டு டிசம்பர் 5 முதல் 25ஆம் நாள் வரை புகைப்படங்களை அனுப்பலாம்.
2021ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் பரிசு பெறும் சிறந்த புகைப்படங்கள் வெளியிடப்படும்.
புகைப்படங்களுக்கான விதிமுறைகள்:
இப்போட்டியில் கலந்து கொள்ளும் வழிமுறை:
குறிப்பிட்ட காலத்துக்குள் உங்கள் புகைப்படங்கள், உங்கள் பெயர், புகைப்படங்களின் தகவல்கள் உள்ளிட்டவற்றை மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு அனுப்ப வேண்டும்.
இந்த 2 மின்னஞ்சல் முகவரிகளில் ஏதேனும் ஒன்றுக்கு அனுப்பலாம். புகைப்பட எடுப்பவரின் பெயரும், புகைப்படத்தின் பெயரும் அனுப்பப்பட வேண்டும்.
inch@cri.com.cn
inchtamil@gmail.com
பரிசுகள்:
முதல் பரிசு:ஒரு நபருக்கு
இராண்டாவது பரிசு:3 பேருக்கு
மூன்றாவது பரிசு:5 பேருக்கு
நினைவு பரிசு:பலருக்கு
தொடர்புடைய நிபுணர்கள் சிறந்த நிழற்படங்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
பரிசு பெறும் புகைப்படங்கள் CRI Tamil முகநூல் பக்கத்தில் வெளியிடப்படும். அத்துடன் மின்னஞ்சல் மூலம் பரிசு பெற்றவர்களுடன் தொடர்பு கொள்வோம். பரிசு பெற்றவர்களுக்கு தமிழ் பிரிவின் நேரலை நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் வாய்ப்புள்ளது.
பிற விஷயங்கள்:
இப்போட்டியுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளில், இப்போட்டிக்கு அனுப்பப்படும் புகைப்படங்கள், பங்கேற்பாளர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களின் தகவல்களைப் பயன்படுத்தும் உரிமை, சீன ஊடகக் குழுமத்தின் தமிழ் பிரிவுக்கு உண்டு.
சீன ஊடகக் குழுமத்தின் முடிவு இறுதி முடிவாகும்.